
ஆகஸ்ட் மாதம் நிகழ்ந்த மதுரை மேம்பால விபத்து தொடர்பான விரிவான ஆய்வறிக்கையை தேசிய நெடுஞ்சாலைத் துறையிடம் நிபுணர் குழுவினர் தாக்கல் செய்துள்ளனர்.
மதுரை புதுநத்தம் சாலையில், தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.545 கோடி மதிப்பில் மதுரை தல்லாகுளம் முதல் செட்டி குளம் வரை 7.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டன. 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பணிகளை முடித்துப் பயன்பாட்டிற்குக் கொண்டுவர திட்டமிட்டிருந்த நிலையில், மேம்பாலத்தின் அருகேயுள்ள இணைப்புப் பாலத்தின் ஒரு பகுதி கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி மாலை இடிந்து விபத்திற்கு உள்ளானதில், உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

