
குன்னூர் விபத்தில் உயிரிழந்த ஜூனியர் வாரண்ட் ஆபிஸர் பிரதீப்பின் உடல் சாலை வழியாக கேரளாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே, நஞ்சப்ப சத்திரத்தை ஒட்டிய வனப்பகுதியில் கடந்த 8-ம் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த 13 பேரில் கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ஜூனியர் வாரண்ட் ஆபீஸர் ஏ.பிரதீப்பும் ஒருவர். இவரது உடல் டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று (11-ம் தேதி) காலை 11 மணிக்கு கோவை மாவட்டம் சூலூரில் உள்ள விமானப் படைத் தளத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அந்த விமானத்தில் வெளியுறவுத்துறை மத்திய இணையமைச்சர் முரளீதரன் உடன் வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

