
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் காவல் சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் திருட்டு, நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்வதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.
புதுச்சேரியில் கொலை, நகை பறிப்பு, வாகன திருட்டு, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்கள் சமீகாலமாக அதிகரித்துள்ளது. இதனை தடுக்க போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ரவுடிகளை ஒடுக்க ஆப்ரேஷன் திரிசூல் என்ற பெயரில் அவ்வப்போது ரவுடிகளின் வீடுகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

