
திருப்பூரில் வீடு கட்டச் சேமித்து வைத்திருந்த ரூ.5 லட்சத்தை ‘ஆன்லைன் ரம்மி’ விளையாட்டில் இழந்த இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
திருப்பூர் பாளையக்காடு ராஜமாதா நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (37). பனியன் தொழிலாளி. இவரது மனைவி மீனா. தம்பதியருக்கு, ஆறு மற்றும் எட்டு வயதில் மகள்கள் உள்ளனர். இவர் திருப்பூரில் வீடு கட்ட, ரூ.5 லட்சத்தைச் சேமித்து வைத்திருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

