
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மிக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது. திருச்செந்தூர் கோயிலுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் பக்தர்கள் பாதிக்கப்பட்டனர். மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு பாதியில் விடுமுறை விடப்பட்டதால் மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் பெரும் திண்டாட்டம் அடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மிக கனமழை கொட்டியது. நேற்று, இரவில் விட்டுவிட்டு லேசான மழை பெய்ததாலும், காலையில் 9 மணி வரை பெரிய அளவில் மழை இல்லை என்பதாலும் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்படவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

