
சென்னை கோடம்பாக்கம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நிவாரண பொருட்களை வழங்கினார்.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மழை நீர் தேங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதுடன் நிவாரண பொருட்களையும் வழங்கி வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

