
சென்னையில் வெள்ளநீர் சூழ்ந்த வடசென்னை, துறைமுகம் பகுதிகளை எடப்பாடி கே.பழனிச்சாமி பார்வையிட்டு மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மழைநீர் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளைப் முதல்வர் மு.க.ஸ்டாலின் மூன்று நாட்களாக நேரில் சென்று ஆய்வுசெய்து பல்வேறு நிவாரண உதவிகளையும் மக்களுக்கு வழங்கி வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

