
சென்னையில் நேற்று மாலை முதல் பெய்துவரும் கனமழை மற்றும் காற்று காரணமாக சென்னைக்கு விமானங்கள் வருகை மாலை வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை, தீவிர காற்றழுத்தழத்தத் தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக மாறி நகர்ந்து வருகிறது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் சென்னையில் நேற்று மாலை முதல் பரவலாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

