
வடகிழக்குப் பருவமழையால் தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் நிரம்பி வருவதோடு, பல்வேறு இடங்களில் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. சில இடங்களில் ஏரியில் கரை உடைந்து தேங்கிய நீரும் வெளியேறி குடியிருப்புப் பகுதிகளில் புகுந்துள்ளது.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் 51 ஏரிகள் நிரம்பி வருகின்றன. நிரம்பிய ஏரிகளில் இருந்து மதகுகள் வழியாகத் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

