
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள அரசுப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தொடர்ந்து 3 ஆண்டுகளாக மாநில அளவிலான ஓவியப் போட்டியில் சாதித்து வருகிறார்.
அறந்தாங்கி அருகே அரசர்குளம் மேற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் ஹரிராஜ். இவர், சுப்பிரமணியபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். ஓவியத்தில் கைதேர்ந்த இவர், தனது வீட்டு சுவர்களில் இயற்கை காட்சிகளை வரைந்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

