
குமரிக் கடல் பகுதியில் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் சேதமடைந்த இயந்திரப் படகுக்கு ரூ.70 லட்சம் இழப்பீடு வழங்குவதாக பனாமா நாட்டு சரக்குக் கப்பல் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி குளச்சல் கடல் பகுதியில் அக்.22-ம் தேதி பகல் 3 மணியளவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இயந்திரப் படகு மீது பனாமா நாட்டின் எம்வி நவ்யாஸ் வீனஸ் சரக்குக் கப்பல் மோதியது. இதில் இயந்திரப் படகும், அதிலிருந்த மீனவர்களும் காயமடைந்தனர். இது தொடர்பாகக் குளச்சல் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

