
முல்லைப்பெரியாறு அணையிலிருந்து நீர்வரத்து பெறமுடியாத நிலையில் ஆண்டிப்பட்டி விவசாயிகளைக் காக்க விரைவில் பட்டினிப்போராட்டம் மேற்கொள்ளப் போவதாக பாஜக அறிவித்துள்ளது.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்டிப்பட்டி ஜி.உசிலம்பட்டி உள்ளிட்ட சில இடங்கள் மேட்டுப்பாங்கான பகுதிகளாக உள்ளன. இதனால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பாசன வசதி இன்றுவரை பெறமுடியாத நிலை ஏற்பட்டுவருகின்றன. இங்கு வறண்டு கிடக்கும் குளங்களுக்கு நீர்வரத்துக்கு ஆவண செய்யும்படி தமிழக பாஜக கோரிக்கை வைத்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

