
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் 3-வது நாளாக ஆய்வு செய்தார்.
வடகிழக்குப் பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை முழுவதும் மழை பாதிப்பு அதிகரித்துள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம், திரு.வி.க. நகர், சோழிங்கநல்லூர், பெருங்குடி பகுதிகளில் அதிக அளவிலான மழைநீர் தேங்கியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

