
புதுச்சேரி பயனடையும் விதமாக கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, காவிரி நதிகளைத் தென்பெண்ணை மற்றும் சங்கராபரணி ஆறுகளுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தென்னிந்திய மாநில கவுன்சில் மாநாட்டில் துணைநிலை ஆளுநர் தமிழிசை வலியுறுத்தியுள்ளார்.
திருப்பதியில் 29-வது தென்னிந்திய மாநில கவுன்சில் கூட்டம் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்றது. இதில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசையும், முதல்வர் ரங்கசாமியும் பங்கேற்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

