
மூளை ரத்தக்குழாயில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு அதிநவீன சிகிச்சை அளித்து கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மூவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.
கோவையைச் சேர்ந்த கிருஷ்ணவேணி (48), உடுமலையைச் சேர்ந்த பொன்னுசாமி (63) ஆகியோர், மூளை ரத்தக்குழாயில் உருவான பலுான் போன்ற வீக்கத்தால், வெடிப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், மூளையின் முக்கியமான தமனி மற்றும் சிரையில் உள்ள ரத்தம் கலந்து, இடது கண்ணில் வீக்கம், தாங்க முடியாத வலியுடன், கோவையைச் சேர்ந்த மாரியம்மாள் (38) என்பவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

