
ராஜஸ்தானில் எல்லைப் பாதுகாப்புப் படையில் பணிபுரியும் தனது கணவரைச் சந்திப்பதற்காக ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்த மனைவிக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பேபி ஷாலினி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ''என் கணவர் துரைசிங், எல்லைப் பாதுகாப்புப் படையில் ஹவில்தாராகப் பணியாற்றி வருகிறார். சில நாட்களாக அவரை போனில் தொடர்புகொள்ள முடியவில்லை. என் கணவர் எங்கிருக்கிறார்? எப்படியிருக்கிறார்? எனத் தெரியவில்லை. எனவே என் கணவரைக் கண்டுபிடித்து ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

