
மழையால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் என தமிழக அரசு அறிவித்துள்ள குறைந்த இழப்பீடு தொகையை விவசாயிகள் ஏற்றுகொள்ள மாட்டார்கள் என அண்ணாமலை தெரிவித்தார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் சேதமான பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர் தோவாளையில் உடைப்பு ஏற்பட்ட பெரியகுளத்தில் இருந்து தண்ணீர் வெளியேறும் பகுதி, மற்றும் இடிந்த வீட்டை பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் திருப்பதிசாரம், வேம்பனூர், மணவாளகுறிச்சி, குன்னக்காடு பெரியகுளம், காப்புக்காடு, அதங்கோடு, வைக்கலூர், காஞ்சாம்புறம் போன்ற மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

