
புதுச்சேரி மாநிலத்தில் விவசாயிகளின் சிரமங்களை போக்கும் வகையிலான திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என வேளாண்துறை அமைச்சர் தேனி சி.ஜெயக்குமார் கூறியுள்ளார்.
மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை சார்பில் சமூக வலுவூட்டல் முகாம், காரைக்கால் அம்மையார் கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் இன்று(ஆக.6) நடைபெற்றது. புதுச்சேரி சமூக நலத்துறை, காரைக்கால் மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், இந்திய செயற்கை அவயங்கள் உற்பத்திக் கழகம் மூலம் (அலிம்கோ) மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

