
இன்றைக்கு ஒரே நாளில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடக்கும் என, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்தார்.
இன்று (ஆக. 24) ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படும் கரோனா தடுப்பூசி மையம் மற்றும் ரூ.2 கோடி செலவில் தன்னார்வ அமைப்புகளால் வழங்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தியைக் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தனர்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

