
இருசக்கர வாகனத்துக்கு மூன்றாவது நபருக்கான விபத்துக் காப்பீடு நடைமுறையில் இல்லாததால் விபத்து இழப்பீட்டை வாகன உரிமையாளரே செலுத்த வேண்டும் எனக் கோவையில் உள்ள மோட்டார் வாகன விபத்துகள் சிறப்பு சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை கரியாம்பாளையத்தைச் சேர்ந்தவர் எஸ்.ராஜேந்திரன் (40). இவர் தனது இருச்கர வாகனத்தில் நரசிம்மாபுரத்தில் இருந்து தொண்டாமுத்தூர் செல்லும் பிரதான சாலையில் 2017-ம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி சென்றுகொண்டிருந்தபோது, எதிரே கோவை நரசீபுரத்தைச் சேர்ந்த ஏ.அஸ்வின் (26), சேலம்பாரக்கவுண்டன் புதூரைச் சேர்ந்த என்.ஈஸ்வரமூர்த்தி (24) ஆகியோர் அதிவேகமாக ஓட்டிவந்த ராயல் என்ஃபீல்டு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், ராஜேந்திரனின் வலது கால் முட்டி, முட்டிக்கு மேல் உள்ள எலும்பு முறிந்து, உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

