
நீர்வரத்து குறைந்துவிட்டதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த ஒரு வாரத்தில் 6 அடி வரை குறைந்துள்ளது. டெல்டா பாசனத்துக்கு உரிய காலம் வரை நீர் திறப்பதற்கு கூடுதல் நீர் வரத்து தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
தென்மேற்குப் பருவமழைக் காலத்தில், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருக்கும். தற்போது பருவமழைக் காலம் நீடிக்கும் நிலையிலும், காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்யாததால், கர்நாடகா அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்படாமல் உள்ளது. இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு மிகக்குறைந்த அளவே நீர்வரத்து காணப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

