
மதுரை மாநகராட்சியில் தினமும் அதிகாலையிலே தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்களுடன் சென்று மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்து தரும்படி பொதுமக்களிடம் விழிப்புணர்வு செய்து தூய்மைப்பணியாளர்கள் குப்பைகளை சேகரித்தனர்.
மதுரை மாநகராட்சியில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளை சேகரித்து, அவற்றை உரமாக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக மாநகராட்சியில் 27 இடங்களில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தினமும் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகள் இந்த மையங்களுக்கு கொண்டு வரப்பட்டு உரமாக்கி மலிவு விலையில் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

