
கரோனா பெருந்தொற்று குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரின் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டுவிட்டது. தொற்றைக் குறைக்க அமல்படுத்தப்பட்ட கரோனா ஊரடங்கால், பள்ளிகள் திறக்கப்படாமல் குழந்தைகள் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள பள்ளிகளால், தமிழகத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றுள்ளன. இடைநிற்றல் அபாயமும் அதிகரித்து, குழந்தைத் தொழிலாளர்கள் உருவாகி வருகின்றனர்.
வகுப்பறைக் கல்விக்கு மாற்றாக அமலில் உள்ள ஆன்லைன் கல்வி, தொழில்நுட்ப, பொருளாதாரக் காரணங்களாலும் உடல் ரீதியான பிரச்சினைகளாலும் பெரும்பாலான மாணவர்களுக்கு ஏற்றதாக இல்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

