
ஊரகத் தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் சென்னை - சைதாப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கோட்டூர்புரம் சிதிலமடைந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளை மறுகட்டுமானம் செய்வது தொடர்பாக திட்டப்பகுதி மக்கள் மற்றும் சங்க நிர்வாகிகளிடம் கருத்துக் கேட்புக்கூட்டம் இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் கோட்டூர்புரம் திட்டப் பகுதியில் சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு தற்போது சிதிலமடைந்த நிலையிலுள்ள குடியிருப்புகளை அகற்றி மறுகட்டுமானம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

