
புதுச்சேரியில் ஆண்களை விடப் பெண் வாக்காளர்கள் அதிகம். ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலில் பெண்களுக்கான வாய்ப்பும், தேர்வாகும் பெண்களும் குறைவுதான். அதையும் தாண்டி 58 ஆண்டுகளில் இரு பெண்கள் மட்டுமே அமைச்சர்களாகியுள்ளனர். வரும் உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை முக்கியக் கட்சிகள் தரவேண்டும் என்ற கோரிக்கைகள் எழத் தொடங்கியுள்ளன.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் பெண் உறுப்பினர்களுக்குக் குறைந்த அளவே கட்சிகள் வாய்ப்பு தந்து வந்தன. முதல் சட்டப்பேரவையில் (1963 முதல் 1964) சரஸ்வதி சுப்பையா, சாவித்திரி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2-வது சட்டப்பேரவையில் (1964-68) பத்மினி சந்திரசேகரன், அங்கம்மாள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 3-வது சட்டப் பேரவையில் (1969- 74) வீரம்மாள் தேர்வு செய்யப்பட்டார். 4-வது, 5-வது சட்டப்பேரவைக்குப் பெண்கள் யாரும் எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. 6-வது சட்டப்பேரவையில் (1980-83) ரேணுகா அப்பாதுரை தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அமைச்சராகவும் இருந்தார். 7-வது சட்டப் பேரவையில் (1985-90) கோமளா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

