
திருவண்ணாமலையில் டிசம்பர் மாத இறுதிக்குள் புதிய ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகப் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை நகரம், அண்ணா சாலை – திண்டிவனம் சாலையை இணைக்கும் வகையில் ரூ.38.74 கோடியில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. 666 மீட்டர் நீளம் மற்றும் 30 தூண்களைக் கொண்டு பாலம் அமைக்கப்படுகிறது. இரண்டரை ஆண்டுகள் கடந்தும், பணிகள் முழுமை பெறாததால், மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் காலதாமதமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ரயில்வே மேம்பாலப் பணிகளைப் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று (6-ம் தேதி) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

