
மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ‘ஸ்கேன்’ சென்டரில் பெண் நோயாளிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக உதவிப்பேராசிரியர் ஒருவர் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கதிரியக்கவியல் துறையில் உதவிப்பேராசிரியராக சக்கரவர்த்தி பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த கோரிப்பாளையம் பழைய கட்டிடத்தில் இருந்த ஸ்கேன் சென்டரில், நோயாளிகளுக்கு ஸ்கேன் பார்த்து வந்தார். கடந்த வாரம் திடீரென்று அங்கிருந்து சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

