
தமிழகத்தில் கடந்த 7 மாதங்களில் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து ரூ.1,600 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள பெரியமலை மீது அருள்மிகு அமிர்தவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கோயிலுக்கு மலையில் உள்ள 1,305 படிக்கட்டுகளில் நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்ற நிலையில் பக்தர்களின் வசதிக்காக ரோப் கார் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது,ரோப் கார் வசதி அமையும் இடத்தில் பக்தர்களின் வசதிக்காக முதல் கட்டமாக ரூ.11 கோடி மதிப்பீட்டில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (டிச.13) காலை நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

