
தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சைக்கான கட்டணத் தகவல் பலகை வைக்கக்கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “தனியார் மருத்துவமனைகளில் பிரசவத்துக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கின்றனர். குழந்தைப் பிறப்புக்குப் பிறகு மருத்துவமனையில் இருக்கும் நாட்களுக்கும் தனிக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு மருத்துவமனையிலும் மருத்துவ சிகிச்சைக்கான கட்டணம் மாறுபடுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

