
குன்னூர் பாஸ்டியர் ஆய்வகத்தில் உற்பத்தி செய்யப்படும் முத்தடுப்பு மருந்து (டிபிடி) விநியோகம் 2023-ம் ஆண்டு முதல் தொடங்கும் என ஆய்வக இயக்குநர் எஸ்.சிவகுமார் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில், 1907-ல் நிறுவப்பட்ட பாஸ்டியர் நிறுவனத்தில், வெறி நாய்க்கடி மருந்து தயாரிக்கப்பட்டது. தற்போது, 'ரேபிஸ்' நோய் கண்டறியும் மையமாகச் செயல்படுவதுடன், மருத்துவமும் அளிக்கப்படுகிறது. இந்த நிறுவனம் கக்குவான், தொண்டை அடைப்பான், ரண ஜன்னி (டிபிடி) முத்தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனமாக மாற்ற, ரூ.137 கோடி செலவில் உலகத்தர கட்டுமானம், உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

