
பழங்குடியின மலையாளி என ஜாதி சான்றிதழ் வழங்காததால் உயர்கல்வி படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என தண்டராம்பட்டு அருகே புளியம்பட்டி கிராமத்தில் வசிக்கும் மாணவிகள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை வகித்தார். அப்போது அவரிடம் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக்கோரி மனு அளித்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

