
சிங்கப்பூரில் இருந்து இலங்கை வழியாக மதுரைக்கு வந்த விமான பயணி ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உள்ளதாக என, ஆய்வு செய்யப்படுவதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மதுரை விமான நிலையத்தில் துபாய், மற்றும் சிங்கப்பூரிலிருந்து இலங்கை வழியாக வந்த பயணிகளிடம் சுகாதாரத்துறையினர் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் துபாயிலிருந்து 128 பயணிகளும், இலங்கையிலிருந்து 151 பேரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

