
தமிழகத்தில் பெய்துவரும் கனமழை பாதிப்புகள் குறித்து போனில் கேட்டறிந்த பிரதமர் நரேந்திர மோடி பாதிப்புகளைச் சீர்செய்திட போதிய நிதி அளிப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் உறுதி அளித்தார்.
வடகிழக்குப் பருவமழை தீவிரமாகியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

