
மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் ஆகம முறைப்படி திருப்பணிகளைத் தொடங்கவேண்டும் என வலியுறுத்தி இந்து அமைப்பினர் இன்று போராட்டம் நடத்தினர். இதனால் போலீஸார் குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் பெண்களின் சபரிமலை எனப் போற்றப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் கேரள மாநிலத்தில் இருந்து பெண்கள் அதிக அளவில் இருமுடி கட்டிவந்து அம்மனுக்கு நேர்த்திகடன் செலுத்துகின்றனர். இக்கோயில் மூலஸ்தானக் கூரையில் கடந்த ஜூன் 2ம் தேதி தீ விபத்து ஏற்பட்டு சேதமடைந்தது. பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தற்காலிகமாக இரும்பு மேற்கூரை அமைக்கப்பட்டிருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

