
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த வீடுகள், விளைநிலங்கள், நீர்நிலைகள், கால்நடைகள் குறித்த கணக்கெடுக்கும் பணி இரு நாட்களில் தொடங்கப்படும் என அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பெரியகருப்பன், மனோதங்கராஜ் ஆகியோர் தெரிவித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட தோவாளை, பெரியகுளம், சுசீந்திரம் பழையாறு, வெள்ளமடம் பகுதிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் ஆகியோர் அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

