
தமிழக அரசு அறிவித்துள்ள 2022-ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பை இணைக்க வேண்டும் எனக் கடலூர் விவசாயிகள் முதல்வருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் 2022-ம் ஆண்டு வரவுள்ள பொங்கல் பண்டிகையையொட்டி, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் முகாம்களில் வசிப்பவர்களுக்கென 20 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் எனத் தமிழக அரசு சார்பில் இன்று அறிவிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

