
தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் டெல்டா மாவட்டங்களில் ஒரு லட்சம் ஏக்கர் நெற்பயிர் மழைநீரில் மூழ்கிய நிலையில் டெல்டா விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
வடகிழக்குப் பருவமழை தொடங்கியதிலிருந்தே டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் நாகை மற்றும் திருப்பூண்டியில் தலா 31 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

