
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா பிரசித்தி பெற்றது. இந்தாண்டு வரும் 19ஆம் தேதி மகா தீபத் திருவிழா நடைபெற உள்ள நிலையில் கடந்த 7ஆம் தேதி இரவு துர்கையம்மன் உற்சவமும், 8ஆம் தேதி பிடாரி அம்மன் உற்சவமும், நேற்று (நவ.9) வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர், ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

