
கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறையில் பிளஸ் 2 மாணவன், மாணவிக்குத் தாலி கட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் பெற்றோர், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து குமரியில் அனைத்துப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கும் கவுன்சிலிங் அளிக்க முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிச் சீருடையுடன் மாணவர் ஒருவர், மாணவிக்குத் தாலி கட்டுவதும், காகிதங்களைக் கிழித்து தூவி பிற மாணவர்கள் வாழ்த்துக் கூறுவதும் போன்ற வீடியோ கடந்த இரு நாட்களாக வாட்ஸ் அப், பேஸ்புக், மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக, கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளை அருகே உள்ள பளுகல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. கரோனா ஊரடங்கிற்குப் பின்னர் பள்ளி திறக்கப்பட்ட நிலையில் கடந்த 2-ம் தேதி பள்ளிக்கு வந்த பிளஸ் 2 மாணவர் ஒருவர், தன்னுடன் பயிலும் மாணவிக்கு வகுப்பறையில் வைத்துத் தாலி கட்டுகிறார். இதை மற்றொரு மாணவர் வீடியோ எடுத்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

