
பெரியாறு அணைப் பிரச்சனையில் அரசியல் கச்சேரி தேவையா? என்று தமிழருவி மணியனைத் தலைவராகக் கொண்ட காந்திய மக்கள் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழக விவசாயிகளுக்கு கேரள அரசு துரோகம் இழைத்துள்ளது என்றும் இதனை எதிர்த்து நடவடிக்கை மேற்கொள்ளாமல் திமுக அரசு தமிழக விவசாயிகளின் உரிமைகளை நிலைநாட்டத் தவறிவிட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் காந்திய மக்கள் பெரியாறு அணைப் பிரச்சனையில் அரசியல் செய்யவேண்டாம் என அரசியல் கட்சிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

