
புதுச்சேரியில் சிகப்பு வண்ணத்தில் ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 5 ஆயிரம் மழை நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுவையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழைபெய்தது. மழையால் அன்றாட கூலி தொழிலாளர்கள், விவசாய கூலிகள், மீனவர்கள், கட்டிட தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அரசியல்கட்சிகள், பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்தன. இதையடுத்து கட்டட தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு ரூ.5 ஆயிரம், மீனவர்களுக்கு ரூ.5 ஆயிரம் மழை நிவாரணமாக வழங்கப் படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

