
கரூரில் மத்திய அரசின் சமூக நீதித்துறை முகாம் நடத்தப்படாததைக் கண்டித்து எம்.பி. ஜோதிமணி ஆட்சியர் அலுவலகத்தில் படுத்துறங்கி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று வந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மத்திய அரசின் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் முகாம்கள் நடத்த மாவட்ட ஆட்சியருக்கு 3 முறை கடிதம் எழுதியும் ஏற்பாடு செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே மக்கள் பணி செய்யவிடாமல் தடுக்கும் கரூர் ஆட்சியரைக் கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தின் தரைத்தளத்தில் தரையில் அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

