
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் படுகொலை சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், முன்விரோதம் காரணமாக கொலைச் சம்பவம் நிகழ்ந்ததாகவும் திருவாரூர் எஸ்.பி. தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் நடேச.தமிழார்வன் நேற்று 8 பேர் கொண்ட கும்பலால் நீடாமங்கலத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் முக்கியக் குற்றவாளிகள் 5 பேரை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

