
சென்னையில் நேற்று மாலை முதல் பெய்துவரும் கனமழையால், நகரில் 444 இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. 160 மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன என்று மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலை உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை, தீவிரக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி கனமழையைக் கொடுத்து வருகிறது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் சென்னையில் நேற்று மாலை முதல் பரவலாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

