
காற்றழுத்தத் தாழ்வு நிலையால் புதுச்சேரியில் கடல் சீற்றமடைந்து தரைக்காற்றுடன் அலைகள் உயர்ந்து வருகின்றன. இதனால் பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டு ஒலிபெருக்கியில் மக்களை போலீஸார் எச்சரித்து அனுப்பினர்.
புதுச்சேரியில் கடந்த 5 நாட்களாக கனமழை பொழிவு இருந்தது. நேற்று மாலை முதல் பெய்த கனமழை இரவு முதல் தீவிரம் குறைந்தது. மழை தணிந்து சாரலாக உள்ளதால் பல இடங்களில் வெள்ள நீர் வடிந்துள்ளது. இன்று காலை 8.30 வரை கடந்த 24 மணி நேரத்தில் 34 மி.மீ. மழை பதிவானது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

