
கனமழை காரணமாக மேட்டூர் அணை நிரம்பி வருவதால் வீணாகும் நீரை ஏரிகளில் உடனடியாக நிரப்ப வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்த நிலையில் கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதோடு, மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் கடந்த 5 நாட்களில் மட்டும் 9 டி.எம்.சி நீர் கடலில் கலந்துள்ளது. அதில் ஒரு சிறு பங்கை 22 ஏரிகளிலும் நிரப்பினால் ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலான நிலங்கள் பாசன வசதி பெறும் என பாமக வலியுறுத்தியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

