
வடசென்னை அனல் மின் நிலையம் நிலை 1-ல் மழை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த மின் உற்பத்தி 12 மணி நேரத்தில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
திருவள்ளுர் மாவட்டம், வடசென்னை அனல் மின் நிலையத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (12.11.2021) காலை அனல் மின்நிலையத் தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வைப் பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் மற்றும் உதவிச் செயற்பொறியாளர்களுடன், கடும் மழையினால் நிறுத்தி வைக்கப்படிருந்த அனல் மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தியைத் தொடங்கியது குறித்து ஆய்வு நடத்தினார். இதில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, இயக்குநர் (உற்பத்தி) உ.பா.எழினி, இயக்குநர் (பகிர்மானம்) மா.சிவலிங்கராஜன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

