
தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களைப் பார்வையிட்டு, சேத விவரங்களை அமைச்சர்கள் குழுவினர் இன்று காலை ஆய்வு செய்து கணக்கெடுத்தனர்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் கனமழையாகப் பெய்து வருகிறது. தொடர் மழையால் தஞ்சாவூர் மாவட்டத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் தண்ணீர் தேங்கி சம்பா, தாளடி இளம்பயிர்கள் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளன. இதனால் பயிர்களைக் காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

