
தமிழகத்தில் கனமழை மற்றும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் அனைத்து நிவாரணப் பணிகளும் விரைவாக நடைபெற்று வருவதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்தின் தெரிவித்துள்ளார்.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ள நீர் குடியிருப்புப் பகுதிகளிலும், நெல் வயல்களிலும் சூழ்ந்ததால் மிகப்பெரிய பாதிப்புகளை மக்கள் சந்தித்து வருக்கிறார்கள். மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகள் விரைவாக நடைபெற்றுவருவதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

