
தமிழகத்தில் இதுவரை 6 கோடியே 10 இலட்சத்து 63 ஆயிரத்து 145 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் இன்று 8வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதனையொட்டி பேசிய அமைச்சர் இத்தகவலைத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் 50,000 இடங்களில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் 75 இலட்சம் நபர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

